அப்படி இப்படி ஆடாமல் - வேம்பு
இருக்கிற படியே இருக்கிறது
சொப்பண மாகிலும் காண்பதற்குக் - காற்று
சுதந்திரத் துடனே வாராதோ?
கப்பலா கவிழ்ந்திடப் போகிறது - பின்பு
காரணம் எதுவோ அமைதிக்கு?
எப்பழி தோன்றினும் தோன்றட்டும் - வாயு
இறைவனைத் தடியால் கொல்லுகிறேன்.