வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

20 ஜூலை, 2015

மயான அமைதி!

அப்படி இப்படி ஆடாமல் - வேம்பு
இருக்கிற படியே இருக்கிறது
சொப்பண மாகிலும் காண்பதற்குக் - காற்று
சுதந்திரத் துடனே வாராதோ?
கப்பலா கவிழ்ந்திடப் போகிறது - பின்பு
காரணம் எதுவோ அமைதிக்கு?
எப்பழி தோன்றினும் தோன்றட்டும் - வாயு
இறைவனைத் தடியால் கொல்லுகிறேன்.

உகப்பாய் எனக்குள் உமா!

அட்டியில் இட்டுதான் ஆவி பறந்திட
சுட்டே எரித்தாலும் சொர்ணத்தை - விட்டு
அகன்று விடுமோ அதன்பள பளப்பு
உகப்பாய் எனக்குள் உமா.

25 ஜனவரி, 2015

ஓரானை முகத்தான்

ஓரானை முகத்தானை உள்நெஞ்சில் நினைப்பானை
தீராத தீவினைகள் தீண்டாமல் அறுப்பானை
பாராளுஞ் சிறப்பானை பார்வதியின் புதலோனை
மாறாத குணத்தோடு மனமேநீ நினை!

- பெ.சக்திவேல்