வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!
மரபுக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபுக் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜூலை, 2015

மயான அமைதி!

அப்படி இப்படி ஆடாமல் - வேம்பு
இருக்கிற படியே இருக்கிறது
சொப்பண மாகிலும் காண்பதற்குக் - காற்று
சுதந்திரத் துடனே வாராதோ?
கப்பலா கவிழ்ந்திடப் போகிறது - பின்பு
காரணம் எதுவோ அமைதிக்கு?
எப்பழி தோன்றினும் தோன்றட்டும் - வாயு
இறைவனைத் தடியால் கொல்லுகிறேன்.

உகப்பாய் எனக்குள் உமா!

அட்டியில் இட்டுதான் ஆவி பறந்திட
சுட்டே எரித்தாலும் சொர்ணத்தை - விட்டு
அகன்று விடுமோ அதன்பள பளப்பு
உகப்பாய் எனக்குள் உமா.

23 ஜூலை, 2011

ஒரு ஆல மரம் சாய்கிறது...!


அப்பாவி யாய்நின்ற ஒருவன் – அவன்
சொப்பனத்தில் கப்பலிட்ட ஒருவள் – அதைத்
தப்பாமல் துளைபோட்டு
அப்பாலே கவிழ்த்திட்டு
மறுத்தேன் – மனம் – வெறுத்தேன்.

ஐந்தாண்டு தாண்டியபின் மணப்பேன் – பின்
ஐயமேதும் இல்லாமல் அணைப்பேன் – இதை
ஒப்பினால்நான் காதலிப்பேன்
ஒப்பவில்லை என்றாலோ
காதல் – அது – போதல்.

என்றபடி கூறினாலும் நின்றாள் – எனை
எண்ணூறு பாகமாய்க் கொன்றாள் – மனம்
காதலெனுங் கொடியேற
காமமெனும் மலையேறும்
தேகம் – என் – ஆகம்.

முத்தங்கள் பன்னூறு பகிர்ந்தோம் – இரு
முந்நூறு நாட்களுடல் வகிர்ந்தோம் – என்
ஓதற்கா ரணம்பற்றி
ஓரிருதிங் கட்பிரிய
மறந்தாள் – காதல் – துறந்தாள்.

கடிதங்கள் எத்தனையோ விடுத்தேன் – அதில்
காமத்தை எழுத்தாகத் தொடுத்தேன் – ஒரு
இடிநாளில் இன்னாத
எழுத்தென்னும் விஷக்கடிதம்
வந்தது – திகில் – தந்தது.

கர்த்தருக்கோ அடித்த ஆணி கையில் – என்
கண்மணியோ இதயத்தின் மெய்யில் – அவள்
நர்த்தனம்பு ரிந்தபடி
நடமாடு கிறாளென்னுள்
மயிலாய் – மொழி – குயிலாய்.

இந்தவேளை முதலாய்ச் சகோதரி – எனை
எப்போதும் வெறுக்காமல் ஆதரி – என
பந்தபாசம் அத்தனையும்
பாராமல் சொன்னாள் “நான்
நண்பி” – நானோ – வெம்பி.

உன் பெயரன் அழுகின்றேன் ஆயா – எனை
உமாவோடு சேர்த்தேவைப் பாயா? – என்று
நன்பல்லி குரல்கேட்டு
நாத்திகத்தை மறந்தபடி
கெஞ்சுவேன் – பசியால் – துஞ்சுவேன்.

வானின்கண் தோன்றும்வில் இல்லை – உயிர்
வஞ்சிமறத் தற்பெரிய தொல்லை – உடல்
ஊனின்றி உயிரின்றி
உலவலாம்உன் நினைப்பின்றி
நடக்காது – அடி – கடக்காது.

வாழ்வென்றால் உன்னோடொன் றாவேன் – அதில்
மாற்றமென்றால் மணக்காமல் சாவேன் – இப்
பாழ்மனத்தால் பிறிதுமொரு
பாங்கான பெண்நினைக்க
மாட்டேன் - உறுதி - வேட்டேன்.