வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

18 ஏப்ரல், 2011

49 ஓ - வாக்களிக்க விருப்பம் இல்லை வசதியில் திருத்தம் தேவை!

வாக்காளர்கள் மத்தியில், "யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது,'' என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, "49 ஓ' குறித்து தெரிவித்த கருத்து: சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும், ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பது வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.

என்று நாளிதழ்களிலும் பிற இதழ்களிலும் செய்திகள் வெளியாகி பெருமையோடு மார்தட்டிக் கொள்கின்றன. இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதே சமயத்தில் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிர்பந்தமும் வாக்காளர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. பல சிரமங்களுக்குப் பிறகுதான் 49 ஓ வசதியைப் பயன்படுத்த முடியும். எழுத்து மூலமாக எழுத வேண்டும்.... கையெழுத்திட வேண்டும்.... வாக்காளர் 49 ஓ-வைப் பயன்படுத்துகிறார் என்ற செய்தி வாக்களிக்கும் அறையில் (Booth) உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால்,  வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது மட்டும் மறைமுகமாக வாக்களிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 49 ஓவுக்கு மட்டும் என்ன அவலம்? செய்தி ஊர் முழுக்கத் தெரிய வருகிறது. தான் அளிக்கும் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்ற ரகசியத்தைக் காக்க வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்த அவலத்தைப் போக்க வேண்டும். அதாவது 49 ஓ வசதி வாக்குப் பதிவு எந்திரத்திலேயே ஒரு வசதியாக இருக்க வேண்டும். தவிர்த்து அறையில் உள்ள பணியாளர்களால் உதவப்பட்டு 49 ஓ வசதியைப் பயன்படுத்துமாறு இருக்கும் இந்த நிலைமை அடுத்த தேர்தலில் அல்லது பிற மாநிலத் தேர்தலில் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் நம் தலைவர்களின்! உண்மை நிலையை உணர முடியும். மக்களின் மன நிலையை அறிய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக