ஒத்திசைந்தேகும்
இருவரினதுமானதோர் செய்கையில்
இரு முனைக்கும் செல்ல மறுத்த
நியாயத்தால்
வேசியன் என்று விமர்சிக்கப்படுகிறேன்
எனக்குப் பிடித்தமான
குழவியொன்றின் பாஷையாக இல்லாமல்
அதெனக்குக்
காது குடையும் கடப்பாரையாகிறது
பொய்களால் நிரம்பிய
பேச்சைப் பருகியதன் மயக்கத்தில்
சுயபிரக்ஞை ஏதுமற்று
என்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட
உண்மையின் சாபம்தான் இது
எனக்குப் புரிய வெகுநாளானது
புணர்ப்பில் பிறக்கும் சிறுமுனகலில்
கிட்டும் வலியூறிய மகிழ்ச்சி
எல்லா தருணத்திலும் கிட்டுவதேயில்லை
ஒளி வழியும் திரியின் நுனியில்
வாழ்க்கை சடசடக்கிறது.
இருவரினதுமானதோர் செய்கையில்
இரு முனைக்கும் செல்ல மறுத்த
நியாயத்தால்
வேசியன் என்று விமர்சிக்கப்படுகிறேன்
எனக்குப் பிடித்தமான
குழவியொன்றின் பாஷையாக இல்லாமல்
அதெனக்குக்
காது குடையும் கடப்பாரையாகிறது
பொய்களால் நிரம்பிய
பேச்சைப் பருகியதன் மயக்கத்தில்
என்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட
உண்மையின் சாபம்தான் இது
எனக்குப் புரிய வெகுநாளானது
புணர்ப்பில் பிறக்கும் சிறுமுனகலில்
கிட்டும் வலியூறிய மகிழ்ச்சி
எல்லா தருணத்திலும் கிட்டுவதேயில்லை
ஒளி வழியும் திரியின் நுனியில்
வாழ்க்கை சடசடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக