வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

26 மார்ச், 2011

ஒளி வழியும் திரியின் நுனியில்

ஒத்திசைந்தேகும்
இருவரினதுமானதோர் செய்கையில்
இரு முனைக்கும் செல்ல மறுத்த
நியாயத்தால்
வேசியன் என்று விமர்சிக்கப்படுகிறேன்

எனக்குப் பிடித்தமான
குழவியொன்றின் பாஷையாக இல்லாமல்
அதெனக்குக்
காது குடையும் கடப்பாரையாகிறது

பொய்களால் நிரம்பிய
பேச்சைப் பருகியதன் மயக்கத்தில்
சுயபிரக்ஞை ஏதுமற்று
என்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட
உண்மையின் சாபம்தான் இது

எனக்குப் புரிய வெகுநாளானது
புணர்ப்பில் பிறக்கும் சிறுமுனகலில்
கிட்டும் வலியூறிய மகிழ்ச்சி
எல்லா தருணத்திலும் கிட்டுவதேயில்லை

ஒளி வழியும் திரியின் நுனியில்
வாழ்க்கை சடசடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக